என் அம்மாவே.....!

சிறுபிள்ளையாய் நானிருக்கையில்
சின்னதாய் நான் விட்ட சிறு தவறுக்கு
சிறு தடி எடுத்து 
சின்னதாய் ஓர் அடி அடித்துவிட்டு...
சின்னப் பிள்ளைத்தனமாய் நீ அழுவாயே தாயே......
என் செல்லமே என் செல்லமே என்று
செல்லமாய் தினமும் 
கொஞ்சி மகிழ்வாயே......
உன் செல்லம் எவ்வளவு கெஞ்சியும்
நீ துயில் கொண்டு விட்டாயே...... என் அம்மாவே....

No comments:

Post a Comment